Saturday, November 19, 2011

Fixture

வாழும் முறைமையென
விதித்திட்ட விதிமுறைகள்
கானல் நீராய் கரைந்திட,
அயலான உணர்வுகள்
அகலாமல் ஆர்ப்பரித்திட,
மோனத்தில் கரையும்
மோகத்துளிகள்
ஈளையிவள் என இடித்துரைக்க,
கண்ணனுக்காய் காத்திருக்கும்
கோதைகளை பரிகசித்த செறுமை,
சிந்தையில் எச்சமாய் சிதறிட,
நானும் காதலில் விழ விழைகிறேன் ...
ஆயினும் ,
ஒவ்வொரு முறையும்
சிந்தைக்கு செயல் வடிவம் கொடுக்கும்,
இருத்தலை இயலாய் கருதும்
எனக்குள் வாழும் ஒருத்தி
தலையிலடித்து சிரிக்கிறாள்...