Wednesday, November 5, 2014

My country :-)



அலுவலகம் செல்லும் வழியில்,
நகர நெரிசலில் இருந்து ,
சற்றே விலகி காத்திருக்கும்,
அந்த ஆலமரம் ...
விழுதுகள் புடைசூழ,
விழுதுகளே ஆதாரமாய்,
பெருமித மதர்ப்புடன்,
பல சமயம்....
விழுதுகளே பாரமாய் ,
தாள முடியாத ஆயாசத்துடன்,
சோர்வாய் சில சமயம் ...
ஆனால்,
என்றும் விழுதுகளே,
தன் அடையாளமாய்...