Thursday, September 10, 2009

வாழ மறந்த வாழ்க்கை

நினைத்தவாரல்லாமல் நடக்கும்
நிகழ்வுகளையும்
பொருள் கொள்ள முடியா
உணர்வுகளையும்
பின்னொருகாலத்தில்
பிறிதொரு நேரத்தில்
பொறுமையாய் எதிர்கொள்ளலாம்
என்றெண்ணி மனதின் மூலையில்
புதைக்கின்றேன்.
புதைப்பவை பயன்படா
படிமங்களாய் பரிணாமம்
செய்வதை உணராமல்.
இவ்வாறே
என் வாழ்க்கை நகர்கின்றது
நான் வாழ மறந்த நொடிகளை
சுமந்தபடி ...

பெயரிடப் படாமலேயே போகட்டும்...

குமுறலாய் தோன்றும் உணர்வுகளை
அழகாய் பிரித்தறிந்து
வார்த்தைகளில் வடிவமைத்து
அணிகள் பல கூட்டி
வறையரைக்குள் உட்படுத்துவதன்
வெளிப்பாடு மட்டுமே கவிதை
எனில் இப்பகுதியில் உள்ளவை
பெயரிடப் படாமலேயே போகட்டும்...