நினைத்தவாரல்லாமல் நடக்கும்
நிகழ்வுகளையும்
பொருள் கொள்ள முடியா
உணர்வுகளையும்
பின்னொருகாலத்தில்
பிறிதொரு நேரத்தில்
பொறுமையாய் எதிர்கொள்ளலாம்
என்றெண்ணி மனதின் மூலையில்
புதைக்கின்றேன்.
புதைப்பவை பயன்படா
படிமங்களாய் பரிணாமம்
செய்வதை உணராமல்.
இவ்வாறே
என் வாழ்க்கை நகர்கின்றது
நான் வாழ மறந்த நொடிகளை
சுமந்தபடி ...
நிகழ்வுகளையும்
பொருள் கொள்ள முடியா
உணர்வுகளையும்
பின்னொருகாலத்தில்
பிறிதொரு நேரத்தில்
பொறுமையாய் எதிர்கொள்ளலாம்
என்றெண்ணி மனதின் மூலையில்
புதைக்கின்றேன்.
புதைப்பவை பயன்படா
படிமங்களாய் பரிணாமம்
செய்வதை உணராமல்.
இவ்வாறே
என் வாழ்க்கை நகர்கின்றது
நான் வாழ மறந்த நொடிகளை
சுமந்தபடி ...